கீரை வகைகளை
உட்கொண்டாலே பாலை விட முதல் தரமான கால்சியம் உங்களுக்கு கிடைக்கும்!
பால்
விலையேற்றத்துக்கு பலத்த எதிர்க்குரல்களும் போராட்டங்களும் வெடித்து வரும் சூழலில்,
‘விலையேற்றத்திலும் ஒரு
நன்மை இருக்கிறது’ என்று
நெத்தியடியாகக் கூறுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீசன். “பால் விலையேறும் போதாவது பாலின் பயன்பாடு குறைய
வாய்ப்பிருக்கிறது.
அது மனித
இனத்துக்கு நல்லதுதான்” என்கிற இவர்,
தன் நோயாளிகள் அத்தனை
பேரிடமும் பால் பொருட்களை தவிர்க்கும்படி அறிவுறுத்துகிறார். தனது மருத்துவ
அட்டையின் பின்புறத்தில் Avoid Animal Milk At All Ages For A Healthy Life என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பாலை
எதிர்ப்பதற்கான காரணம் கேட்போம் அவரிடமே!
“மனிதனுக்கு பால்
எதற்கு தேவை? இந்தக் கேள்வியை
மருத்துவ ரீதியில் அலசி ஆராயும்போது, ‘தேவையே இல்லை’ என்பதை விட ‘அதிபயங்கர விளைவை ஏற்படுத்தும்’ என்கிற பதில்தான் கிடைக்கும். நான் மரபணுவியல்
படிக்கும்போது பால் தொடர்பான மரபணுக்கள் பற்றி தெரிந்து கொண்டேன். அதன் பிறகு இது
குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். எந்த ஓர் உயிரினத்துக்கும் உடல் மற்றும் மூளை வளர்ச்சியடையும்
வரையிலும்தான் பால் தேவை. அதற்குப் பிறகு உட்கொள்ளப்படும் பால் உபரிதான்.
பாலில் லேக்டோஸ்
எனும் சர்க்கரைச் சத்து இருக்கிறது. அது சிறுகுடலுக்கு செல்லும்போது அங்கிருக்கும்
லேக்டேஸ் எனும் நொதிப்பொருள் அதை குளுக்கோஸ், கேலெக்டோஸ் என இரண்டாகப் பிரிக்கிறது. மூளை,
கண் மற்றும் நரம்பு
மண்டலங்களின் வளர்ச்சிக்கு கேலெக்டோஸ் அத்தியாவசியமானது. மனிதனுக்கு 3 வயது
வரையில்தான் மூளை வளர்ச்சியடையும், அதற்குப் பிறகு
பால் குடிப்பதை விட்டு விட வேண்டும்.
ஏனெனில் லேக்டோஸை
இரண்டாகப் பிரிக்கிற லேக்டேஸ் நொதி, 3 வயதுக்கு மேல் உடலில் இருக்காது. அதனால், சிறுகுடலுக்கு வரும் லேக்டோஸ் செரிமானம் ஆகாமல்,
பெருங்குடலுக்குச் சென்று,
அங்குள்ள பாக்டீரியாக்களை
தின்று, கார்பன் டை
ஆக்ஸைடாக மாறி, வாயுத் தொல்லையை
ஏற்படுத்தும். போதுமான மூளை வளர்ச்சிக்கு பிறகும் கேலெக்டோஸ் இருந்தால், அதன் உபரி கண் லென்சிலும் ரத்தக்குழாயிலும்
படியும். இதனால் ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் கண்புரை ஆகியவை ஏற்படுகின்றன.
கர்ப்பிணிகள்
தங்களது குழந்தை கால்சியம் சத்தோடு வளர பால் குடிக்கும்படி
அறிவுறுத்தப்படுகிறார்கள். மனிதனை விடவும் பல மடங்கு பெரிய யானை உள்பட எந்த உயிரினமாவது
கர்ப்ப காலத்தில் பால் குடிக்கிறதா? பின் எப்படி அவற்றுக்கு திடகாத்திரமான எலும்பு களோடு குட்டிகள் பிறக்கின்றன?
காரணம்... அவை தாவரங்களை
உணவாக உட்கொள்கின்றன. பாலில் இருக்கும் கால்சியம் இரண்டாம் தர கால்சியம்தான். கீரை
வகைகளை உட்கொண்டாலே பாலை விட முதல் தரமான கால்சியம் உங்களுக்கு கிடைக்கும்.
எலும்பு
வளர்ச்சிக்காக பால் குடிக்கலாம் என்பது உலகின் மிகச் சிறந்த வணிகப் பொய்களில்
ஒன்று. இயல்பாகவே மனித ரத்தத்தில் 7.4 பி.ஹெச். அமினோ அமிலம் இருக்கிறது. பால் குடிக்கும் போது ரத்தத்தில் பி.ஹெச்.
அளவு உயர்கிறது. இதைக் குறைத்து சமநிலைப் படுத்துவதற்காக எலும்பு கரைக்கப்படும்.
பாலால் எலும்பு வலுவடையும் என்கிற கருத்துக்கு நேரெதிராக எலும்பு தேய்மானம் ஆகிறது
என்பதே உண்மை. பசும்பாலில் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அதிக அளவில்
இருக்கிறது.
புரத ஒவ்வாமை
கொண்டவர்கள் பாலை உட்கொள்ளும்போது பல விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு முறை பால்
சாப்பிடும் போதும் வயிற்றில் சில மில்லி அளவு ரத்தக்கசிவு ஏற்படுகிறது. கர்ப்ப
காலத்தில் வரும் நோய்களில் ரத்தசோகையும் ஒன்று. இந்நிலையில் கர்ப்பிணிகள் பால்
உட்கொண்டால் ஏற்படும் ரத்தக்கசிவால் ரத்தசோகை வலுவடையும். கர்ப்ப காலத்தில் ரத்த
சோகையைத் தடுக்க இரும்புச் சத்து மாத்திரை களையும் கொடுத்து விட்டு, ரத்தசோகையை ஏற்படுத்தும் பாலையும் குடிக்கச்
சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
Lancet எனும் உலகப்
புகழ் பெற்ற மருத்துவ இதழ், 1992ல் வெளியிட்ட
ஆய்வின் படி, உலகில் பால்
சாப்பிடாதவர்களைக் காட்டிலும் பால் சாப்பிடுபவர்களுக்கே மூன்றரை பங்குக்கு அதிகமாக
ரத்தப் புற்றுநோய் மற்றும் Lymphoma புற்றுநோய் ஏற்படுவதாக கூறியுள்ளது. பாலில் இருக்கும் bovine lymphoma
virusதான் புற்றுநோயை
ஏற்படுத்துகிறது. பாலில் இருக்கும் saturated fat மிகவும் மோசமானது.
மாட்டிறைச்சி
உண்ணும் அசைவ விரும்பிகளைக் காட்டிலும், பால் மற்றும் நெய் சாப்பிடும் சைவ உணவினருக்குத்தான் அதிக அளவு மாரடைப்பு
ஏற்படுகிறது’’ என்கிறார். ‘‘பாலுக்கு மிகப்பெரிய வணிகச் சந்தை இருக்கிறது
அந்தச் சந்தைக்காக பாலுக்குப் பின்னால் கட்டமைக்கப்பட்டிருக்கும் அரசியல் இதை விட மோசமானது’’ என்கிறார் அக்கு ஹீலர் உமர் ஃபாருக். ‘உடலின் மொழி’,
‘வீட்டுக்கு ஒரு
மருத்துவர்’ ஆகிய நூல்களை
எழுதியுள்ள இவர், பால் உற்பத்திப்
பெருக்கத்துக்காக செய்யப்படும் மோசடிகள் குறித்துப் பேசுகிறார். ‘‘பிரான்ஸ் விஞ்ஞானி டாக்டர் லூயி கேர்வரான்,
‘மனிதன் கால்சியத்துக்காக
பாலை உட்கொள்கிறானென்றால் மாடு
கால்சியத்தை எங்கிருந்து பெறுகிறது?’ எனும் கேள்வியை எழுப்புகிறார். கால்சியத்தை பெற பால் குடிக்கச் சொல்வது
மிகப்பெரிய அபத்தம்.
பால் பவுடர்
எனும் கொடுமை
பால் கிடைக்காத
சூழலில் பாலுக்கு மாற்றாக பால் பவுடரை கலக்கி பயன்படுத்துவது வாடிக்கை. திரவ
வடிவிலான பாலை திட வடிவுக்கு கொண்டு வர என்னென்ன செயல்பாடுகள் செய்யப்படுகின்றன
தெரியுமா?
பாலை பவுடராக்குவதற்காக மெலமைன் எனும்
நச்சுப்பொருள் கலக்கப்படுகிறது. இதன் விளைவை அறிந்த பல நாடுகள் மெலமைன் அளவுக்கு
கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. 2008, 2009 ஆண்டுகளில்
நூற்றுக்கணக்கான சீனக் குழந்தைகளுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ்
மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள்
செய்யப்பட்டது.
இந்த சிறுநீரக பாதிப்பு குறித்து சீன அரசு நடத்திய ஆய்வில் மெலமைன் நச்சுப்பொருள்தான்
இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது. 2009ல் சீனாவில் விற்கப்படும் பால் பவுடர்கள் சோதனை
செய்யப்பட்ட போது அவற்றில் மெலமைன் நச்சு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக
இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
உடனே சீன அரசு பல
பால் பவுடர் நிறுவனங்களை தடை செய்தது. எந்த பால் பவுடர்களை சீன அரசு தடை செய்ததோ,
அதே நிறுவனம் இந்தியாவில்
தன்னுடைய விளம்பரங்களையும் விற்பனையையும் எவ்விதத் தடைகளும் நிபந்தனைகளுமின்றி
செய்து லாபம் ஈட்டுகிறது. சீனாவுக்கு முன்னரே இந்த பால் பவுடர் நிறுவனங்கள்
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பாக்கெட் பால்
பயங்கரம்
87 சதவிகிதம்
தண்ணீரும் 13 சதவிகிதம் இதர
பொருட்களும் இருப்பதுதான் பால். இயற்கையின் இந்த இயல்புக்கு மாற்றாக கெட்டியான
பால் வேண்டும் என விரும்புவோரின் சாய்ஸ் ‘பாக்கெட் பால்’. அது எப்படி தயாராகிறது? பல ஊர்களின் பால் பண்ணைகளில் இருந்து
பெறப்படும் பால் மொத்தமாக சேமிக்கப்பட்டு அதிலிருந்து கொழுப்பு பிரிக்கப்படுகிறது.
பின்பு கொழுப்பு
நீக்கப்பட்ட பாலினை உடைத்து இயந்திரத்தின் மூலம் கலக்கப்படுகிறது. பாலின்
தரத்துக்கு ஏற்றவாறு அதன் கெட்டித் தன்மையை அதிகரிக்க, தேவையான அளவுக்கு கொழுப்பு அல்லது கொழுப்பு
பவுடர் சேர்க்கப்படுகிறது. புரதத்தின் அளவைக் கூட்டவும் கொழுப்பின் அளவைக்
கூட்டவும் இப்படியான செய்முறைகள் செய்யப்படுகின்றன. இது வழக்கமான முறை.
சில நிறுவனங்கள்
பாலின் கெட்டித்தன்மைக்காக ஸ்டார்ச், மைதா மாவு, குளுக்கோஸ்,
மரவள்ளிக்கிழங்கு மாவு,
ஜவ்வரிசி போன்ற பொருட்களை
கலக்குகின்றன. பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அமோனியா, சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் ட்ரை ஆக்ஸைடு, பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு போன்றவற்றில் ஏதேனும்
ஒரு பொருள் சேர்க்கப்படுகிறது. அமோனியா இருப்பதாலும் மிக எளிதாக கிடைப்பதாலும்
சிறு வியாபாரிகள் பலரும் யூரியாவை பாலில் கலக்குகிறார்கள்.
பால் மிக அதிக
குளிர்ச்சிக்கு உட்படுத்துதல், கிருமிகளை
நீக்குதல், செயற்கைச் சுவை
அதிகரித்தல் என்று பல நிலைகளைக் கடந்து பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. பாலின்
இயற்கையான உயிராற்றலானது ரசாயனக் கலப்பாலும் இயற்கைத் தன்மை மாற்றத்தாலும்
பாதிப்படைகிறது. உயிராற்றலே இல்லாத பாலை குடித்து நமக்குத்தான் என்ன கிடைத்துவிடப்
போகிறது?
100 நாள் அபயம்
100 நாட்களானாலும்
கெட்டுப்போகாத சிந்தெடிக் பால் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். சிந்தெடிக் பால்
மாட்டிலிருந்து பெறப்படுவது அல்ல. வேதியியல் கூறுகள் மூலமே தயாரிக்கப்படுகின்றன. இந்த செயற்கை பாலை நாம்
ஆராய்ந்து பார்த்து கண்டுபிடித்து விட முடியாத அளவு இதன் தயாரிப்பு உத்திகள்
உள்ளன. வாஷிங் மெஷின் போன்ற டிரம்மில் வெந்நீருடன் காஸ்டிக் சோடாவும் யூரியாவும்
கலக்கப்படுகிறது. டிரம்மை வேகமாகச் சுழல வைத்து அதிலிருந்து நுரை பொங்கி வரும்போது
அதனுள் டிடர்ஜென்ட் பவுடர், ஷாம்பு ஆகியவை
கலக்கப்படும்.
கொழுப்புச்
சத்துக்காக மட்டரகமான ஆயிலும், வெண்மை
நிறத்துக்காக கிழங்கு மாவும், இனிப்புக்காக
சாக்ரீனும் சேர்க்கப்பட்டு, முப்பதே
நிமிடங்களில் தயாரிக்கப்படுகிறது இந்த நச்சுப் பால். யூரியாவை கலப்பதன் மூலம்
கொழுப்பு அல்லாத பிற சத்துகளைக் கூடுதலாகக் காட்டவும், காஸ்டிக் சோடா
கலப்பதன் மூலம் பால் கெடாமல் பார்த்துக் கொள்ளவும், அதன் அமிலத் தன்மையை சமன் படுத்திடவும்
முடியும். கொழுப்புச் சத்துக்காகக் கலக்கப்படும் எண்ணெய் தண்ணீரில் கரைவதற்காக
டிடர்ஜென்ட் பவுடர் சேர்க்கப்படுகிறது.
புற்றுநோய்க்கான
சாத்தியக்கூறுகள்
அதிகம் உள்ள இந்த
சிந்தெடிக் பாலின் விற்பனை பற்றி இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய
ஆணையத்தின் புள்ளி விவரத்தைப் பார்ப்போம். சத்தீஸ்கர், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 100 சதவிகிதம் செயற்கைப் பால் புழங்குகிறது. குஜராத் 89%, பஞ்சாப்
81%, ராஜஸ்தான் 76%,
தில்லி 70%, மகாராஷ்டிரா 65% என்ற விகிதங்களில் செயற்கைப் பால் விற்பனையில்
உள்ளன. தமிழ்நாட்டில் இது குறித்து இன்னும் முழுமையான ஆய்வுகள் நடைபெறவில்லை.
கலப்பட யுக்தி
பால் கலப்படம்
தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2014 ஜனவரி 30 அன்று நீதியரசர் ராதாகிருஷ்ணன் மாநில அரசுகளுக்கு
ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளார். குழந்தைகளின் முக்கிய உணவாக இருக்கும் பாலில்
கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரை.
எவ்வளவுக்கு எவ்வளவு அதிக பால் உற்பத்தி செய்யப்படுகிறதோ அவ்வளவு வருவாய் ஈட்ட
முடியும் என்கிற லாப வெறி, மனிதர்களைப்
பற்றியோ அவர்களது உடல் நலன் குறித்தோ யோசிக்க விடுவதில்லை.
ஹார்மோன்
கலப்படம் முதலாவது...
கன்றுக்குட்டி
சீக்கிரம் வளர்ந்தால்தானே பால் கறக்க முடியும் அதற்காகத்தான் ஹார்மோன் ஊசிகள்
போடப்படுகின்றன. ஹார்மோன் பயன்படுத்தி பசு வளர்ப்பதையும், பால் கறப்பதையும் ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்துள்ளன.
இந்த தடை
உத்தரவுகளை கோடிகளில் புரளும் பால் நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை. ஹார்மோன்
கலப்புகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அதிக அளவில் பால் கறப்பதற்காக மரபணு மாற்று உயிரியல் தொழில்நுட்பமும்
பசுக்களில் பயன்படுத்தப்படுகிறது.
அதிக பால்
கறக்கும் பசு இனத்தையும் சீக்கிரம் வளரும் பசு இனத்தையும் கலப்பினம் செய்து தொழில்
ரீதியான கறவை மாடுகள் தயாரிக்கப்படுகின்றன. இது போன்ற கலப்படங்களால் மனித இனம்
சந்திக்க இருக்கும் பெரு நோய்களை பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகும்!’’ இப்படி
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
அளிக்கிறார் உமர்
ஃபாரூக்.
காலம் காலமாக
இயற்கை ஆர்வலர்கள் பாலை ‘வெள்ளை விஷம்’
என்றே
குறிப்பிடுகிறார்கள். சாதாரண பாலே விஷம் என்றால் கலப்படங்களுக்கும் வேதியியல்
மாற்றங்களுக்கும் ஆளாகும் பாக்கெட் பால், கலப்பினப் பசுக்களின் பால், பால் பவுடர்,
சிந்தெடிக் பால்
போன்றவற்றை என்ன சொல்வது? பால் தவிர்த்து
வாழ முடியாது என்கிற எண்ணமிருந்தால் இப்போதே அதை அழித்து விடுங்கள்.
டீ குடிப்பதால்
சுறுசுறுப்பு வருகிறது என நம்புகிறோம், உண்மையில் அதன் சூடுதான் நம்மை சுறுசுறுப்பாக்குகிறது. பாலைத் தவிர்த்து கேரள
மக்களை போல் கட்டஞ்சாயா (பால் அற்ற தேநீர்) அருந்தலாம். உடல் நலத்தை
பேணிக்காப்பதில் அலட்சியம் காட்டுவது மிகப்பெரிய மூடத்தனம். உடல் நலத்துக்குப்
பிறகுதான் எல்லாமும் என்பதை கருத்தில் கொள்வோம். பாலைத் தவிர்த்த வாழ்வை
சாத்தியப்படுத்துவோம்.