விரல்களில் நெட்டை எடுப்பது ஆபத்தானது ஏன்?

உங்களில் நிச்சயமாகப் பலர் விரல் சொடுக்குவதை (நெட்டி முறிப்பதை) வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு விரல்களின் முனையை நீட்டி இழுத்து சிலர் சொடுக்கு எடுக்கிறார்கள், இன்னும் சிலர் தங்கள் முட்டியை இறுக்கமாக மூடி அல்லது ஐந்து விரல்களையும் பின்னோக்கி வளைத்தோ நெட்டி முறிக்கிறார்கள். ஏன், இதை விடச் சிலர் மனக்கலக்கம் அல்லது அமைதியின்றி இருக்கும் பொழுது சொடுக்குவதை அதிகமாக செய்து, இதனால் அவர்களுக்கு அமைதி ஏற்படுகின்றது என்று கூறுகின்றார்கள். 25 முதல் 54 சதவீத மக்கள், இதிலிம் குறிப்பாக பெண்களை விட ஆண்களே அதிகமாக நெட்டி முறிக்கின்றார்கள். சரி, இது எல்லாம் இருக்கட்டும், ஆனால் இந்தச் சத்தம் எதனால் ஏற்படுகின்றது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா ?

எந்த முறையை பயன்படுத்தினாலும், சொடுக்குதலின் போது ஏற்படும் அந்த நொறுங்குதல் போன்ற சத்தம் ஒரே முறையில் தான் உருவாகின்றது. விரல்களை மடக்கியோ, அல்லது இழுத்தோ சொடுக்கும் பொழுது, மூட்டு இணைப்புகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி அதிகரிக்கிறது. இதன் காரணாமாக முட்டிகளில் உருவாகும் synovial fluid எனப்படும் மூட்டுறை திரவத்தில் கரைந்திருக்கும் வாயுக்களில் நுண்ணிய குமிழிகள் (bubbles) உருவாகும்.  இந்த நுண்ணிய குமிழிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பெரிய குமிழிகள் உருவாக, இதன் காரணமாக ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப வெளியிலிருந்து கூடுதல் மூட்டுறை திரவம் விரைந்து வரும். இந்தக் கூடுதலாக வரும் திரவம், இடத்தை நிரப்பும் முன்னர் உருவான குமிழிகள் அனைத்தையும் உடைத்து விடுகின்றது. அப்படி உடையும் போது ஏற்படும் அந்தச் சத்தம் தான் உங்களுக்கு விரல்கள் சொடுக்குதலின் பொழுது கேட்கிறது.

ஒருமுறை உங்கள் விரல்களை சொடுக்கியதும், ஏறத்தாழ அடுத்த பதினைந்து நிமிடத்திற்கு மீண்டும் சொடுக்க முடியாது. இது, விரல் முட்டிகள் மீண்டும் அதன் முந்திய சீரான அளவுக்கு மூட்டுறை திரவ வாயுக்களில் குமிழி உருவாகவும் வழி செய்கிறது. பதினைந்து நிமிடங்கள் கழிந்ததும் மறுபடி சொடுக்கி, மீண்டும் குமிழி உடையும் சத்தத்தைக் கேட்கலாம். இது தான் நெட்டி முறிக்கும் போது ஏற்படும் சத்தத்தின் இரகசியம், வேறு ஒன்றுமே இல்லை!


விரல்களில் நெட்டை எடுப்பது ஆபத்தானது ஏன்?

பொதுவாக நெட்டை முறிப்பதால் எந்த ஒரு பிரச்சனைகளும் வர வாய்ப்பில்லை. ஆனால் அடிக்கடி நெட்டை முறிப்பதால் இணைப்புகளை சுற்றி இருக்கும் மெல்லிய சதைகளுக்கு பாதிப்பு இருக்கும் மேலும் இந்த பழக்கம் கை வீக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் கையின் பிடிமான தன்மையை குறைக்கும். இவைகளை வைத்து கணக்கிடும்போது பொதுவாக நெட்டை முறிப்பதால் எந்த பிரச்ச்னைகளும் ஏற்படாது ஆனால் அடிக்கடி நெட்டை முறிப்பதால் கை வீக்கம், தசை நார் பாதிப்பு, கையின் பிடிமான தன்மை குறைவு ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

விரல்களில் ஏற்படும் வலியை தடுக்க, விரல்களில் நெட்டை எடுப்பது மிகவும் ஆபத்தானது. விரல்களில் நெட்டை எடுப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

ஆனால் நெட்டை எடுக்கும் நேரத்தில் சுகமாக இருந்தாலும், அதன் பின் பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு, அது பாதிப்பை உண்டாக்கிவிடும்.

விரல்களில் வலி ஏற்படும் போது, சிவப்பு நிறமாக மாறுவது, வியர்வை ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

கை விரல்களை அதிகமாக பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டால், கை விரல்களுக்கான பயிற்சிகளை செய்து, விரல்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

இல்லையெனில், விரல்கள் முழுமையாக சோர்வடைந்து, அது நரம்பு மண்டலத்தை தாக்கி, அதிக வலியை ஏற்படுத்தும். அதனால், விரல்களுக்கான சிறு சிறு பயிற்சிகளை முன்னெச்சரிக்கையாக செய்து கொள்வது மிகவும் நல்லது.